You are currently viewing 5th Social Science Guide Term 3 Lesson 2

5th Social Science Guide Term 3 Lesson 2

5th Social Science Guide Term 3 Lesson 2

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 2 வேளாண்மை

5th Social Science Guide வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.

________________ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.

அ. நீர்ப்பாசனம்

ஆ. வேளாண்மை

இ. அகழ்வராய்ச்சி

விடை:ஆ. வேளாண்மை

Question 2.

______________ என்பவர் உணவு அல்லது மூலப் பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.

அ. மருத்துவர்

ஆ. ஆசிரியர்

இ. விவசாயி

விடை:இ. விவசாயி

Question 3.

_______________ வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.

அ. வணிக

ஆ. கலப்புப் பொருளாதார

இ. தன்னிறைவு

விடை:ஆ. கலப்புப் பொருளாதார

Question 4.

_______________ நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.

அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்

ஆ. மெட்ரோ நீர் வாரியம்

இ. யூனியன் குடிநீர் வாரியம்

விடை:அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்

Question 5.

தமிழகத்தில் உள்ள ______________ மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

அ. கோயம்புத்தூர்

ஆ. சென்னை

இ. கடலூர்

விடை:அ. கோயம்புத்தூர்          

II. பொருத்துக

விடை:

  1. தோட்ட வேளாண்மை – ஒற்றைப் பணப் பயிர்
  2. கலப்புப் பொருளாதார வேளாண்மை – விலங்குகளை வளர்ப்பது
  3. வணிக வேளாண்மை – விற்பனை நோக்கம்
  4. கிணற்று நீர்ப் பாசனம் – பழைமையான முறை
  5. தன்னிறைவு வேளாண்மை – குடும்ப நுகர்வு

III. சரியா தவறா?

Question 1.

தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும்.விடை:சரி

Question 2.

தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன.விடை:தவறு

Question 3.

சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண்பாசன முறையாகும்.

விடை:சரி

Question 4.

தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விடை:சரி

Question 5.

மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும்.விடை:சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.

வேளாண்மை என்றால் என்ன?

விடை:

வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும்.

Question 2.

விவசாயிகளைப் பற்றி எழுதுக.

விடை:

விவசாயி என்பவர் , உணவு அல்லது மூலப்பொருள்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார். இந்தியா, விவசாயிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பான்மையான இந்தியர்கள் நேரடியாகவோ, மறைமுகமகவோ விவசாய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்.

Question 3.

வேளாண்மையின் வகைகளைக் கூறுக.

விடை:

வேளாண்மையில் பல வகைகள் உள்ளன. * தன்னிறைவு வேளாண்மை * வணிக வேளாண்மை * தோட்ட வேளாண்மை * கலப்புப் பொருளாதார வேளாண்மை

Question 4.

கிணற்று நீர்ப் பாசனம் என்றால் என்ன?

விடை:

கிணற்றிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு நீரை வெளியேற்றுவது கிணற்று நீர்ப்பாசனம் எனப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் கிணற்று நீர்ப்பாசன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வகைப் பாசனம் மிகவும் மலிவான பாசன முறையாகும்.

Question 5.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

விடை:

மத்திய நிலத்தடி நீர் வாரியம் நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

V. விரிவான விடையளிக்க

Question 1.

கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.

விடை:

தோட்ட வேளாண்மை :

ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப்பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவது தோட்ட வேளாண்மையாகும். எடுத்துக்காட்டுகள் : தேயிலை, காபி, இரப்பர்

கலப்புப் பொருளாதார வேளாண்மை :

கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது, பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமல்லாமல் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது. கலப்பு விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தவர்களாக உள்ளனர்.

Question 2.

ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசனமுறைகளைப் பற்றி விவரி.

விடை:

தெளிப்பானை நீர்ப்பாசனம் :

தெளிப்பானை நீர்ப்பாசனம் என்பது மழைப்பொழிவு போன்ற நீர்ப்பாசன முறையாகும். குழாய்கள் மூலம் தெளிப்பான்கள் வழியாக நீர் மழை போன்று தெளிக்கப்படுகிறது.

சொட்டு நீர்ப் பாசனம் :

சொட்டு நீர்ப் பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். இம்முறையானது, நீர் – மற்றும் மண்ணின் ஊட்டச்சத்துகளைச் சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த நீர்ப்பாசன முறையில் நீரானது குழாய்களின் மூலம் தாவரங்களின் வேர்களில் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் மண்ணின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும்.இதனால், நீர் ஆவியாவது குறைகிறது.

Question 3.

தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.

விடை:

தமிழ்நாடு, வெவ்வேறு வேளாண் காலநிலைகள் மற்றும் மாறுபட்ட மண் வகைகளைக் கொண்டுள்ளது. இது பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்கள், தோட்டப் பயிர்கள், பூக்கள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் உற்பத்திக்கு ஏற்றதாகும். தமிழ்நாட்டில் தோட்டக்கலை வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறையாகும்.

இங்கு நெல் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி மாநிலத்தின் முக்கிய உணவாகும்.

அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் (கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, பச்சைப் பயறு, உளுத்தம் பருப்பு மற்றும் கொள்ளுப் பயறு) ஆகியவை முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.

பணப்பயிர்களில் பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள், காபி, தேயிலை, இரப்பர், தேங்காய், எள் மற்றும் மிளகாய் ஆகியவை அடங்கும்.

மாம்பழம் மற்றும் வாழைப்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர்கள் ஆகும்.

மல்லிகை, செவ்வந்திப் பூ, சாமந்திப் பூ மற்றும் ரோஜா ஆகியவை தமிழகத்தில் வளர்க்கப்படும் முக்கிய பூ வகைகளாகும்.

5th Social Science Guide வேளாண்மை Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

இந்தியா ஒரு ____________ நாடு.விடை:விவசாய

Question 2.

குடும்ப நுகர்வுக்கு மட்டும் பயன்படுவது ____________ வேளாண்மை ஆகும்.

விடை:தன்னிறைவு

Question 3.

சந்தையில் விளைபொருள்களை விற்பதே _______________ வேளாண்மையின் நோக்கம் ஆகும்.விடை:வணிக

Question 4.

கலப்புப் பொருளாதார வேளாண்மையில் பயிர்களுடன் ______________ வளர்க்கப்படுகின்றன.விடை:விலங்குகளும்

Question 5.

விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கும் அரசு நிறுவனம் ______________ ஆகும்.விடை:இந்திய உணவுக் கழகம்

Question 6.

விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையிலுள்ள தரகர்களை நீக்க _____________ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.விடை:உழவர் சந்தையை

Question 7.

வடமேற்கு மற்றும் _______________ பருவ மழையின் மூலம் தமிழகத்திற்கு தண்ணீ ர் கிடைக்கிறது.விடை:தென்கிழக்குப்

Question 8.

_____________ நீர்ப்பாசனம் என்பது மிகப் பழமையானது.விடை:கிணற்று

Question 9.

வடஇந்தியாவில் அதிகம் பின்பற்றப்படுவது ______________ நீர்ப்பாசனம் ஆகும்.

விடை:கால்வாய்

Question 10.

பசுமைப் புரட்சியின் தந்தைவிடை:Dr. M.S. சுவாமிநாதன்

II. சுருக்கமாக விடை தருக

Question 1.

பயிர் உற்பத்தியில் மகசூல் அதிகரிக்கும் முறையின் பெயர் என்ன?

விடை:பசுமைப் புரட்சி

Question 2.

மழைப் பொழிவு போன்ற நீர்ப் பாசன முறை எது?

விடை:

தெளிப்பானை நீர்ப்பாசனம்

Question 3.

பழங்கள், பூக்கள், அலங்காரத் தாவரங்கள் வளர்க்கும் அறிவியல் கலை எது?

விடை:தோட்டக்கலை

Question 4.

தமிழகத்தின் முக்கியமான உணவு எது?

விடை:அரிசி

Question 5.

தானியங்களும், பருப்பு வகைகளும் எவ்வகைப் பயிர்கள்?

விடை:உணவுப் பயிர்கள்

Question 6.

பணப் பயிர்களுக்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.

விடை:பருத்தி, கரும்பு, காபி, தேயிலை

Question 7.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?

விடை:தஞ்சாவூர்

Question 8.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது?

விடை:கோயம்புத்தூர்

Question 9.

தஞ்சாவூர் எங்கு அமைந்துள்ளது?

விடை:காவிரி டெல்டாவில்

Question 10.

இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

விடை:இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு

5th Social Science Guide வேளாண்மை InText Questions and Answers

பக்கம் 131 செயல்பாடு நாம் செய்வோம்

(இழுவை, இயந்திரம், தூற்றி, விவசாயி)

பின்வருவனவற்றைக் கண்டுபிடிக்க.

Question 1.

நமக்காக உணவை உற்பத்தி செய்பவர்.

வி __ __ யி

விடை:வசா

Question 2.

இது உழுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இ __ வை இ __ __ __ __ ம்

விடை:ழு யந்திர

Question 3.

இது வைக்கோலில் இருந்து தானியங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தூ __ றி

விடை:ற்

Question 4.

இந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் மாநிலம் எது?

விடை:ஆந்திரப்பிரதேசம்

Leave a Reply